மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (11. 07. 2024) 2-ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே. ஜி. கண்டிகை ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் 2-ம் கட்டமாக நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” திட்டம் முகாமில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.