73 சவரன் நகை திருட்டு நான்கு பேர் கைது

2473பார்த்தது
73 சவரன் நகை திருட்டு நான்கு பேர் கைது
திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் முருகத்தாய், (வயது 48) செவிலியர். கடந்த 13ம் தேதி இரவு, இவரது வீட்டின் பூட்டுடைத்து 73 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இத்திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பு பாபு உட்பட நான்கு பேரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதில், 22 சவரன் நகையை, சென்னையில் உருக்கி பணமாக வைத்திருந்தபோது போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மீதமுள்ள நகையை மீட்க, தனிப்படையினர் நேற்று, வெளி மாவட்டத்திற்கு புறப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி