உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை பாபாநாசம் வன சோதனைச்சாவடி முதல் அகஸ்தியர் அருவி வரை உள்ள பகுதியில் தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள், மற்றும் பாபநாச வனச்சரக சூழல் காவலர்கள் இணைந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வனச்சரக அலுவலர் சத்தியவேல் தலைமையில் வனப்பணியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி முகாமும் நடத்தப்பட்டது.