அனுமன் ஜெயந்தி விழா இன்று (டிசம்பர் 30) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர சுத்தமல்லி விலக்கில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.