தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்பட்டன. அந்த வகையில் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முதல் நாள் வந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் முனைவர் பெருமாள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.