திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி-சேரன்மகாதேவி மாநில நெடுஞ்சாலையில் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் 3.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்க பணி தொடக்க விழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்தார்.