நெல்லையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராதாபுரம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நேற்று (டிசம்பர் 29) நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் தர்மசாஸ்தா ஐயப்பன் வாகன வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.