நெல்லை மாவட்டம் பேட்டை ரயில்வே கேட் முதல் கரையிருப்பு வரை செல்லும் கோடகன் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சகதி மண்ணை தூர் வாரும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் நந்தினி ஆகியோர் துவக்கி வைத்தனர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.