குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் இன்று நெல்லை மாவட்டம் முத்தூரில் 33. 35 ஏக்கர் பரப்பளவில் ரூ. 15 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொழில் துறை கூடுதல் ஆணையர் சிவசௌந்தரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.