சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது.

563பார்த்தது
சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது.
திசையன்விளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார் தலைமையிலான காவல்துறையினர் திசையன்விளை பி. எஸ். என் எல் அலுவலகம் அருகே இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இட்டமொழி, அம்பேத்கர் தெருவை சேர்ந்த *முத்துராஜ் (23)* என்பவரை சோதனை செய்ததில் முத்துராஜ் இருசக்கர வாகனத்தில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் உதவி ஆய்வாளர் முத்துராஜை கைது செய்து செய்து அவரிடமிருந்து 23 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி