வக்ப் வாரிய திருத்த மசோதா குறித்து கருத்து கேட்பதற்காக நேற்று (செப்.,30) சென்னை வருகை தந்த பாராளுமன்ற கூட்டு குழுவினரிடம் தமிழகத்தின் இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது ஆட்சேபனைகளையும், ஆலோசனைகளை கூறினர். இதில் நெல்லை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப் கலந்து கொண்டு சட்ட திருத்தத்திற்கு தனது கண்டனங்களை பதிவு செய்தார்.