வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குழி, பஜனை மடத் தெருவை சேர்ந்த சுடலை முத்து என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான *சுடலைமுத்து என்ற சங்கர்(37)* என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 18. 05. 2023 அன்று சுடலை முத்துவின் வீட்டிற்கு முன்பு வைத்து சுடலைமுத்துவையும் அவருடைய மகளையும் சுடலை முத்து என்ற சங்கர் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுடலைமுத்துவின் மகள் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் *உதவி ஆய்வாளர் சுப்பையா அவர்கள்* வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுடலைமுத்து என்ற சங்கரை 19. 05. 2023 இன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.