நெல்லை மணிமுத்தாறு மலையடிவார பகுதியில் கடந்த சில நாட்களாகவே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை சிறுத்தை வேட்டையாடுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்குமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது வனத்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சிறுத்தை நடமாடத்தை கண்காணித்து கூண்டு வைத்து அதை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.