பாளையில் சக மாணவனையும் ஆசிரியரையும் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவன் குறித்து வழக்கில் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் தலைமையில் நேற்றிரவு விசாரணை நடைபெற்றது. இதில் வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் அவரை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார்.
மேலும் தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.