திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் டவுண் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாநகர் நல அலுவலர் சரோஜா திருநெல்வேலி மண்டல உதவி ஆணையாளர் (பொ) தங்கபாண்டியன் மற்றும் சுகாதார அலுவலர் ஜான்ஜோனா பார்க் சுகாதார ஆய்வாளர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.