பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவன் நலமுடன் இருப்பதாகவும் கத்தி குத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.