நெல்லையில் கொலையான ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் வீடு அமைந்துள்ள தெருவில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை ஜாகிர் உசேன் மகன் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் படியான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.