நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு பல மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாளையங்கோட்டை மண்டலத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பாளையங்கோட்டை வாட்டர் டேங்க் அருகில் சம்பள உயர்வு கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.