நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் பல தெருக்களில் இன்று குப்பைகள் உரிய நேரத்தில் சேகரிக்கப்படவில்லை. இதனால் குப்பை தொட்டிகள் நிரம்பி குப்பைகள் சாலையில் குவிந்து கிடந்தது. பல்வேறு கழிவுகளும் சிதறி கிடந்தன. எனவே நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் குப்பைகளை உடனுக்குடன் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.