நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே கோட்டூர் அழகு நாச்சி அம்மன் கோயில் அருகில் இன்று பிற்பகல் இருசக்கர வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இது குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.