நெல்லை ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் பணியில் பலர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டுள்ள முதியவர்கள் 2 பேர் இன்று திடீரென கையால் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற காவலர் ஒருவர் ஓடி சென்று இருவரையும் சமாதானப்படுத்தினார். மனு எழுதிக் கொடுப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பகையால் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.