நெல்லை மாவட்டத்தில் இருந்து நடப்பாண்டு 11, 126 மாணவர்கள், 11, 274 மாணவிகள் என 22, 400 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர் இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளியானது அதில் 10, 156 மாணவர்கள், 10, 942 மாணவிகள் என மொத்தம் 21, 098 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 29 ஆவது இடத்தில் இருந்து நெல்லை மாவட்டம் தற்போது 20 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் உள்ளது மாணவர்கள் 91. 28
மாணவிகள் 97. 06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்