இது குறித்து எஸ்டிபி கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கும் எஸ். டி. பி. ஐ. கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தேர்வில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்கள் மனந்தளராமல் அடுத்து இருக்கும் தேர்வுகளில் முழு முயற்சியோடு தேர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் என்று அறிக்கையில் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.