வல்லநாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் 14.11.2024 முதல் 28.12.2024 வரை நடைபெற்ற 56 நாட்கள் கமாண்டோ பயிற்சியில் தென் மாவட்டங்களில் இருந்து 63 காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் நெல்லை மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ராஜு ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் 3 கேடயங்கள் பெற்றுள்ளார். ராஜுவை இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.