நெல்லை மாவட்ட பாஜக சார்பில் வரும் 28ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுக்கூட்டம் குறித்து முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.