நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொறுநை நெல்லை புத்தகத் திருவிழா விரைவில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு இன்று (ஜன.3) நாங்குநேரி ஏபிஏ கல்லூரியில் வாசகர் வட்ட மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்தும் நூல் திறனாய்வு குறித்தும் பல்வேறு விஷயங்கள் விழிப்புணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது. புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்குவதற்கு இந்நிகழ்ச்சி ஒரு ஊக்கமாக அமைந்தது.