நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை

74பார்த்தது
நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை
நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயங்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லை சந்திப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது.

இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது. இந்த நிலையில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி