திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த வகையில் இன்று (ஜூன் 7) காலை நிலவரப்படி மாவட்டத்தின் மொத்தமாக 17. 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஊத்துப்பகுதியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.