திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பரவலான மழையால் அணை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்திற்காக 404. 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதேபோல் மணிமுத்தாறு அணையில் இருந்து 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் விவசாய பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.