நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி மீண்டும் கேரளாவுக்கே கழிவுகளை எடுத்து செல்லும் நடவடிக்கை இன்று (டிசம்பர் 22) காலை 8:00 மணி முதல் நடைபெற்று வருகின்றது.
தற்போழுது டாரஸ்ட் லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு சென்று வண்ணம் உள்ளது. கேரளா கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே எடுத்து செல்லும் சம்பவத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.