நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலாக இன்று (மார்ச் 16) கன்னியாகுமரி பயணிகள் ரயில் நிறுத்தம் செய்யப்பட்டது. முதல் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் ஏற்பட்டதாக சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை பயணிகள் நிறுத்தினர். துர்நாற்றம் வீசும் பெட்டியை மாற்றிக் கொடுத்தால் மட்டுமே ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.