மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.