பார்வையற்ற புத்தக கட்டுனருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 17) சென்னை காமராஜ் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவு அளிப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.