சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டலம் மாம்பழச் சங்க பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு புதுப்பேட்டை சேகரம் கொண்டாநகரம் கிறிஸ்து ஆலயத்தில் சேகர குருவானவர் சுரேஷ் முத்துக்குமார் ஆலோசனையின்பேரில் இன்று காலை மாம்பழச் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சபை ஊழியர் அன்பு ஏசையா பங்கேற்று கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.