திருநெல்வேலி மாவட்டத்தில் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடைபயிற்சி இன்று (ஜூன் 1) காலை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதா ராணி NGO காலனி வட்டார போக்குவரத்து அலுவலக சாலையிலுள்ள உதயா நகர் சந்திப்பிலிருந்து இந்த நடைபயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.