திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் அக்னி நட்சத்திர தாக்கம் தொடங்கியது முதல் வெப்ப பதிவு 100 டிகிரி கடந்து பதிவாகி வருகிறது.கடந்த 8ஆம் தேதி 101 டிகிரி வெயில் பதிவான நிலையில் நேற்று (மே 9) மீண்டும் 101 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.