உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் அரசியல் மேதை காயிதே மில்லத் பிறந்த தினத்தை முன்னிட்டும் இன்று (ஜூன் 5) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக மேலப்பாளையம் உழவர் சந்தை அருகே மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.