பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில ரேங்க் பட்டியலில் நெல்லை மாவட்டம் கடந்த ஆண்டு 88 சதவீதத்துடன் 29 வது இடத்தில் இருந்து தற்போது 94. 19 சதவீதம் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒரே ஆண்டில் இருபது இடம் முன்னேறி உள்ளது. இதற்கு முழு முக்கிய காரணம் மாவட்ட ஆட்சியரின் ஊக்குவிப்பு தான் என முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தெரிவித்துள்ளார்.