திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 17வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு அரசுப்பள்ளியில் 170 மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா திருவள்ளுவர் தெருவில் வைத்து (ஜூலை 4) நடைபெற்றது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் நிஜாம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.