நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் புதிய கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.