திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு டென் டி கட்டுப்பாட்டில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து தமிழக அரசே நடத்த வேண்டும். என மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து அனைத்து கட்சி குழுவினர் மனு அளித்தனர்.