நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள மத்திய அரசின் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களிடையே தண்ணீரை சிந்தியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை அரிவாளால் தாக்கி உள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.