திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா தலைமையில் இன்று (அக்டோபர் 30) காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் என கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்பொழுது எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்று உளமாற உறுதிமொழி ஏற்று கொண்டனர்.