"திருநெல்வேலி எழுச்சியும் வஉசியும் 1908"என்ற நூலுக்கான சாகித்திய அகடமி விருது பெற்ற இரா. வெங்கடாசலபதி நேற்று (டிசம்பர் 21) தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களில் எழுச்சிக்கான நினைவு சின்னங்களை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.