கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பாபநாசம் அணை நீர் இருப்பு 25 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. தாமிரபரணியில் தண்ணீர் திறப்பும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகின்றது. இதனால் தாமிரபரணி ஆறு சுருங்கி ஓடை போல் காட்சியளிக்கிறது. அமலைச் செடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. இதனால் குளிக்க வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.