நெல்லைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. ரயில் எண் (06005) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு வழி சிறப்பு விரைவாக இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10. 45 மணிக்கு புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 11 மணிக்கு நாகர்கோயிலை சென்று சேருகிறது. இந்த ரயில் எழும்பூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது.