தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜூன் 9) 30வது நிகழ்ச்சியாக பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.