நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரன் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சேனைத்தலைவர் பள்ளியில் வைத்து பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தன் சுத்தம் குறித்தும், பாலித்தீன் பைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விளக்கி பேசினார்