களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அணை பகுதியில் இன்று (டிச.23) செட்டிமேடு பகுதியை சேர்ந்த இரண்டு பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து மீன் பிடிக்க முயன்றனர். அவர்கள் மீது வனக்குற்றம் பதிவு செய்யப்பட்டு அபராதமாக நபர் ஒருவருக்கு ரூ. 4500 வீதம் ரூ. 9000 வசூல் செய்து வனக்குற்ற வழக்கு முடித்து வைக்கப்பட்டது.