நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் திருவாலீஸ்வரத்தில் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. மாவட்ட காச நோய் துணை இயக்குநர் வெள்ளைச்சாமி அறிவுறுதலில் வைராவி குளம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமில் சளி மற்றும் எக்ஸ்ரே மூலம் காச நோய் கண்டறிய பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.